தெலங்கானாவில் மாயாவதி கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியது பிஆர்எஸ்

By என். மகேஷ்குமார்


தெலங்கானாவில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.தெலங்கானாவில் முக்கிய எதிர்க்கட்சியான பிஆர்எஸ் கட்சி, இம்முறை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இரு கட்சிகளும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இந்நிலையில் தெலங்கானாவில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஹைதராபாத், நாகர்கர்னூல் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிஆர்எஸ் தலைவர் கே.சந்திரசேகர ராவ் நேற்று அறிவித்தார்.

தெலங்கானாவில் மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் பகுஜன் சமாஜுக்கு ஒதுக்கியது போக, எஞ்சிய 15 தொகுதிகளில் பிஆர்எஸ் போட்டியிடும் என்றும் சந்திரசேகர ராவ் கூறினார். இரண்டு தொகுதிகளில் நாகர்கர்னூல் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின், தெலங்கானா மாநில தலைவர் பிரவீன் குமார் போட்டியிடுவார் என கூறப்
படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE