எஸ்பிஐ சமர்ப்பித்த தேர்தல் பத்திர விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றியது தேர்தல் ஆணையம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, எஸ்பிஐ வங்கி 2019 ஏப்ரல் முதல் 204 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இந்த விவரங்களை மார்ச் 15-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று தேர்தல்ஆணையம் தேர்தல் பத்திர விவரங்களை அதன் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

பதிவேற்றம் செய்யப்பட்ட இரண்டு கோப்புகளில், முதல் கோப்பில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் பெயர்கள், தொகை விவரம் அடங்கியுள்ளன. இரண்டாவது கோப்பில் தேர்தல் பத்திரங்களை ரொக்கமாக மாற்றிய கட்சிகளின் பெயரும் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் பட்டியலில் சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஏர்டெல், பிரமல்கேபிடல் அண்ட் ஹவுசிங் பைனான்ஸ் உட்பட பல்வேறு நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் பத்திரங்களை ரொக்கமாக மாற்றிய கட்சிகளின் பட்டியலில் பாஜக, காங்கிரஸ், திமுக,அதிமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவ சேனா உட்படபல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கிநேற்றுமுன்தினம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் த்திரம் தாக்கல் செய்தது. அதில், “2019 ஏப்ரல் முதல்2024 பிப்ரவரி 15-ம் தேதி வரையில் மொத்தம் 22,217 தேர்தல்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 187 பத்திரங்களின் தொகைபிரதமரின் தேசிய நிவாரண நிதிகணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE