அசாமில் சிஏஏ-வை எதிர்த்து போராட்டம்

By செய்திப்பிரிவு

திஸ்பூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து அசாம் மாநிலத்தில், ‘அனைத்து அசாம் மாணவர் சங்கம்’ (ஏஏஎஸ்யூ) நேற்று போராட்டம் நடத்தியது. இதனிடையே, சிஏஏ-வுக்கு எதிரான மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த 16 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அசாம் காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிஏஏ அமலுக்கு வருவதாக மத்திய அரசு நேற்றுமுன்தினம் அறிவிப்பாணை வெளியிட்டதையடுத்து ஏஏஎஸ்யூ உட்பட 30-க்குமேற்பட்ட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. அப்போது சிஏஏ ஆவணங்கள் எரிக்கப்பட்டன. இதுகுறித்து ஏஏஎஸ்யூ தலைமை ஆலோசகர் சமுஜ்ஜல் பட்டாச்சார்யா கூறுகையில், “அசாம் மக்களின் கலாச்சாரம், அடையாளம் மீது பாஜக அரசு பெரும் தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. இச்சட்டத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE