மெகா கூட்டணிக்கு நிதிஷ் தேவையில்லை: ராகுல் காந்தி கருத்து

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மெகா கூட்டணியில் இருந்து விலகி, பாஜக அணியுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்திரை பிஹாரில் நுழைந்துள்ளது. புர்னியா பகுதியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், ராகுல் பேசும்போது, ‘‘பிஹாரில் மக்களுக்கு சமூக நீதி அளிக்கும் பொறுப்பை மெகா கூட்டணி ஏற்றுள்ளது. இந்த அணிக்கு நிதிஷ்குமார் தேவையில்லை.

நாட்டில் ஜாதி ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கியம். அப்போதுதான் தலித், ஓபிசி மற்றும் இதர பிரிவு மக்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க முடியும். நாட்டில் வேலைவாய்ப்பின்மையும், பொருளாதார பிரச்சினைகளும் நிலவுகின்றன. ஆனால், இவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப வெறுப்பையும், வன்முறையையும் பாஜக பரப்புகிறது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE