சார்மினார் ரயில் விபத்து: 10 பயணிகள் காயம்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: சென்னை - ஹைதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன் தினம் மாலை வழக்கம்போல் 5.10 மணிக்கு தாம்பரத்திலிருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்டது.

இது நேற்று காலை 8 மணிக்கு ஹைதராபாத் நாம்பல்லி ரயில் நிலையத்துக்கு வந்தபோது, பயணிகள் இறங்க தயாராக இருந்தனர்.ரயில் 5-வது பிளாட்பாரத்தில் வந்த போது, பிளாட்பாரத்தில் நிற்காமல் கடைசியாக இருந்த தடுப்பு சுவர்மீது மோதி நின்றது. இதில் எஸ்-2,எஸ்-3, எஸ்-6 ஆகிய பெட்டிகளில் நின்று கொண்டிருந்த பயணிகள் நிற்க முடியாமல் ஒருவர் மீது ஒருவர் விழுந்து காயமடைந்தனர்.

இதில் 10 பயணிகள் லேசான காயமடைந்தனர். 6 பேர் லாலாகூடா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த விபத்துக்கு ரயில் பைலட்டின் அலட்சியமே காரணம் என்று ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்