ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம், சோட்டிகாம் என்ற கிராமத்தில் பாதுகாப்புபடையினர் நேற்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர். அங்கு மறைந்திருந்த தீவிரவாதி துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அந்த தீவிரவாதி கொல்லப்பட்டார்.
அவர் செக் சோலன் பகுதியைசேர்ந்த, லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி பிலால் அகமது பட் என அடையாளம் காணப்பட்டார். ராணுவ வீரர், பண்டிட் ஒருவர், இரு தொழிலாளர்கள் உட்பட பலரை கொன்றது உட்பட பல்வேறு தீவிரவாத வழக்குகளில் இவர் தொடர்புடையவர் ஆவார் என்று ராணுவ செய்தித்தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.