நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 760 பேருக்கு கரோனா தொற்று உறுதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 760 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4,423-ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

டிசம்பர் 5 வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் மட்டுமே இருந்த நிலையில், குளிர்காலம் தொடங்கியுள்ளதால் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பு தொடங்கிய 2020-ம் ஆண்டின் முற்பகுதியில் தினசரி பாதிப்பு லட்சங்களில் இருந்தது. இதனால், கடந்த நான்கு ஆண்டுகளில் 4.5 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 5.3 லட்சம் பேர் உயிரிழந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE