ஜம்மு காஷ்மீரில் 3.9 ரிக்டரில் நிலநடுக்கம்

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் வியாழக்கிழமை (இன்று, ஜன.4) 3.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது.

நள்ளிரவு 12.38 மணி அளவில் பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மியான்மர், இந்தோனேசியா, ஜப்பான், ஆப்கானிஸ்தான் என பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஜப்பான் நாட்டில் சுமார் 62 பேர் உயிரிழந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE