புதுடெல்லி: மத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
முஸ்லிம் லீக் ஜம்மு காஷ்மீர் அமைப்பின் மசரத் அலாம் பிரிவு மற்றும் அதன் உறுப்பினர்கள் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு தெரிவித்து தேச விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என மக்களை தூண்டுகின்றனர். நாட்டின் ஒற்றுமை, இறையாண்மைக்கு எதிராக யாராவது செயல்பட்டால், அவர்கள் யாரும் தப்ப முடியாது, சட்டப்படி தண்டிக்கப்படுவர் என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தெளிவுபட கூறியுள்ளது. இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.