புதுடெல்லி: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிஉள்ளது.இக்கோயில் வரும் ஜனவரி 22-ம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அயோத்தியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய விமானநிலையம் மற்றும் அதிநவீன வசதிகளைக் கொண்ட ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ம்தேதி திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அங்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்ற உள்ளார். இந்த தகவலை அயோத்தி நகர ஆணையர் கவுரவ் தயாள் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடுகளை பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். ராமர் கோயில்திறக்கப்பட்ட பிறகு, பக்தர்கள் வசதிக்காக முதல்100 நாட்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
» “ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது” - உலகக் கோப்பை தோல்வி குறித்து ஷமி
» “மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக குழுவை ஏற்க முடியாது” - சஞ்சய் சிங்
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago