சட்டப்பிரிவு 370 | தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் யார்?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூரிய காந்த், கிஷண் கவுல், சஞ்சீவ் கன்னா அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தலைமை நீதிபதி சந்திரசூட்: மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, அலகாபாத் தலைமை நீதிபதியாக பணியாற்றிய சந்திரசூட், கடந்த 2016-ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்றார். அவரது தந்தை ஒய்.வி.சந்திரசூட் உச்ச நீதிமன்றத்தின் 16-வது தலைமை நீதிபதி ஆவார்.

நீதிபதி கிஷண் கவுல்: கடந்த 1982-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கிய கிஷண் கவுல், கடந்த 1987-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை உச்ச நீதிமன்றத்தின் ‘அட்வகேட் ஆன் ரெக்கார்ட்' ஆகப் பதவி வகித்தார். கடந்த 2003-ம் ஆண்டில் நீதிபதியாக பதவியேற்றார். கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் கடந்த 2013-ல் பஞ்சாப் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். பின்னர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

நீதிபதி சஞ்சீவ் கன்னா: கடந்த 1983-ம் ஆண்டில் டெல்லி மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞராக சஞ்சீவ் கன்னா பணியைத் தொடங்கினார். பின்னர் டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். கடந்த 2006-ம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். கடந்த 2019-ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வரும் 2025 மே 13-ம் தேதி இவர் ஓய்வு பெறுகிறார்.

நீதிபதி பி.ஆர்.கவாய்: கடந்த 1987 முதல் 1990ம் ஆண்டு வரை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்கறிஞராக பணியை தொடங்கிய பி.ஆர். கவாய் கடந்த 2003-ம் ஆண்டில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். கடந்த 2019-ம் ஆண்டு மே 24-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வரும் 2025-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி அவர் ஓய்வு பெறுகிறார்.

நீதிபதி சூர்ய காந்த்: ஹரியாணாவின் ஹிசார் பகுதியை சேர்ந்த சூர்ய காந்த், கடந்த 1984-ம் ஆண்டில் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். பின்னர் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். கடந்த 2004-ம் ஆண்டு பஞ்சாப் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். கடந்த 2018-ம் ஆண்டில் இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். கடந்த 2019-ம் ஆண்டு மே 24-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வரும் 2027-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி அவர் ஓய்வு பெறுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்