ம.பி. தேர்தல் | கடைசி நாளில் 2,489 பேர் வேட்பு மனு

By செய்திப்பிரிவு

போபால்: ம.பி. உள்ளிட்ட 5 மாநிலங்கள் இம்மாதம் தேர்தலை சந்திக் கின்றன. மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட ம.பி. சட்டப்பேரவைக்கு வரும் 17-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ம.பி. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் கடைசி நாளாகும்.

கடைசி நாளில் மாநிலம் முழுவதும் 2,489 வேட்பாளர்கள் 2,811 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் தொடங்கி கடைசி நாள் வரை 230 தொகுதிகளிலும் மொத்தம் 3,832 வேட்பாளர்கள் 4,359 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை (நவ. 2) கடைசி நாளாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE