ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் கடந்த வாரம் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாருடன், பாதுகாப்புப் படையினர் அங்கு சென்றனர்.
அங்கு கடந்த 7 நாள்களாக பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்துவந்தது. இந்நிலையில் நேற்றுநடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது லஷ்கர் தீவிரவாத அமைப்பின் கமாண்டர் உசைர் கான் உட்பட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்துடன் ஒரு வாரம் நடந்த என்கவுன்ட்டர் முடிவுக்கு வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து போலீஸ் ஏடிஜிபி விஜயகுமார் அனந்த்நாக்கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுவர். இங்கு 3 தீவிரவாதிகள் இருக்கலாம் என எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. இதில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர். 3-வது தீவிரவாதியைத் தேடும் பணி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த வாரம் தெற்கு காஷ்மீரின் கடோல் வனப்பகுதியில் தொடங்கிய இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 ராணுவ அதிகாரிகள், காவல் அதிகாரி உள்பட நான்கு வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago