ஜேபிசி விசாரணைக்கு ராகுல் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மும்பை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மும்பையில் நேற்று கூறியதாவது. வெளிநாட்டு செய்தித்தாள்களில் அதானி குழுமம் தொடர்பாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இந்தியாவிலிருந்து பல கோடி ரூபாய் வெளிநாடுகளுக்கு சென்று அங்கிருந்து மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அவை செய்தி வெளியிட்டுள்ளன.

இவை யாருடைய பணம்? இந்திய கட்டமைப்புத் துறையின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்ய 2 வெளிநாட்டினரை அனுமதித்தது ஏன்? ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டுக்காக இந்தியா வரவுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. இந்த புதிய புகார் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE