கேரள விமான நிலையத்தில் ரூ.44 கோடி போதைப் பொருள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கரிப்பூரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் கென்யாவின் நைரோபி நகரில் இருந்து ஷார்ஜா வழியாக ஏர் அரேபியா விமானத்தில் வந்த ராஜீவ் குமார் என்ற பயணியிடம் வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் 3.5 கிலோ கோகைன்,1.3 கிலோ ஹெராயின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.மொத்தம் 4.8 கிலோ எடைகொண்ட இந்த போதைப் பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.44 கோடியாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE