ம.பி, ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களிலும் காங். வெல்லும்: ராகுல் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

லடாக்: இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

லடாக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அங்கு உள்ளூர் மக்கள், எல்லையில் பணிபுரியும் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோரைச் சந்தித்து அவர்ளோடு உரையாடினார். இதனைத் தொடர்ந்து கார்கிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, "காங்கிரஸ் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது.

இதேபோல், இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE