அமர்நாத் கோயிலுக்கு 32-வது குழு புறப்பாடு

By செய்திப்பிரிவு

ஜம்மு: இமயமலையில் 3888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோயிலுக்கான யாத்திரை கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. இதுவரை 4.3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அமர்நாத் குகையில் உள்ள லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.

அமர்நாத் கோயிலுக்கு செல்லும் 32-வது யாத்ரீகர் குழு இமயமலை அடிவாரத்திலிருந்து வியாழக்கிழமை தனது பயணத்தை தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் குழுவில் 1,198 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில், 1,023 ஆண்கள், 116 பெண்கள், 58 சாதுக்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE