ராகுல் காந்திக்கு ஆயுர்வேத சிகிச்சை

By செய்திப்பிரிவு

மலப்புரம்: கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டக்கல் வைத்திய சாலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் நேற்று கூறியது: ராகுல் காந்தி உடல் ஆரோக்கிய பராமரிப்புக்காக கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

புதன்கிழமை மாலை கோட்டக்கல் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வம்பர கோயிலுக்கு சென்ற அவர் பிரார்த்தனையில் ஈடுபட்டார். அத்துடன் பிஎஸ்வி நாட்டிய சங்கத்தில் நடைபெற்ற கதகளி நிகழ்ச்சியை பிரபல மலையாள எழுத்தாளரும், ஞானபீட பரிசு பெற்றவருமான எம்.டி. வாசுதேவன் நாயருடன் அவர் கண்டுகளித்தார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE