நாட்டின் மக்கள் தொகை 139 கோடியை தாண்டியது - மக்களவையில் அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டின் உத்தேச மக்கள் தொகை 139 கோடி என மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்தார்.

நாட்டின் மக்கள் தொகை எவ்வளவு என மக்களவையில் எழுத்துபூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் கூறியிருப்பதாவது: ஐ.நா.,வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறையின் மக்கள் தொகை பிரிவு ஆன்லைன் வெளியீட்டின்படி சீனாவின் உத்தேச மக்கள் தொகை 2023 ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி 142 கோடியே 56 லட்சத்து 71 ஆயிரம்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தேசிய மக்கள் தொகை ஆணையம் வெளியிட்ட அறிக்கைப்படி இந்தியாவின் உத்தேச மக்கள் தொகை 2023 ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி 139 கோடியே 23 லட்சத்து 29,000.

கரோனா தொற்று: மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 2021-ம் ஆண்டில் நடத்தப் படும் என கடந்த 2019-ம் ஆண்டு அரசிதழில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டன. இவ்வாறு அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE