தீ விபத்தில் தப்பிக்க 3-வது மாடியில் இருந்து குதித்தவர்கள் காயம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி அருகே உ.பி. எல்லையில் அமைந்துள்ள கிரேட்டர் நொய்டாவில் உள்ள கேலக்சி பிளாசா வணிக வளாகத்்தின் 3-வது தளத்தில் நேற்று மதியம் தீப்பற்றியது. தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவத் தொடங்கியது.

இந்நிலையில் தீ விபத்தில் இருந்து தப்பிக்க சிலர் 3-வது தளத்தில் இருந்து கீழே குதிக்கும் அதிர்ச்சிகர வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இவ்வாறு கீழே குதித்ததில் காயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE