புதுடெல்லி: டெல்லி அருகில் உள்ள காஜியாபாத்தில் டெல்லி - மீரட் எக்ஸ்பிரஸ் சாலையில் நேற்று காலை 6 மணியளவில் காரும் பள்ளிப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன,
இந்தக் கோர விபத்தில் காரில்பயணம் செய்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போக்குவரத்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “விபத்தில் சிக்கிய பேருந்து, நொய்டாவில் உள்ள பால பாரதி பள்ளிக்கு சொந்தமானது.
தவறான திசையில் வந்த பேருந்து ஓட்டுநரின் முழு தவறால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்தின் ஓட்டுநர் பிடிபட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.