இந்திய உளவு அமைப்பின் அடுத்த தலைவராக ரவி சின்ஹா நியமனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய உளவு அமைப்பான ரா-வின் அடுத்த தலைவராக ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

ராவின் தற்போதைய தலைவரான சமந்த் கோயலின் பதவிக் காலம் இம்மாதம் 30-ம் தேதியோடு நிறைவடைகிறது. இதன் காரணமாக, அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இதில், ராவின் அடுத்த தலைவராக ரவி சின்ஹாவை தேர்வு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ஜூலை 1-ம் தேதி ராவின் புதிய தலைவராக ரவி சின்ஹா பதவியேற்க இருக்கிறார்.

1988-ம் ஆண்டு சத்தீஸ்கர் கேடர் ஐபிஎஸ் அதிகாரியான ரவி சின்ஹா, தற்போது அமைச்சரவை செயலகத்தின் சிறப்புச் செயலராக இருந்து வருகிறார். பதவி ஏற்றதில் இருந்து இரண்டு ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை ராவின் தலைவராக தொடர்வார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE