கொடைக்கானல் அருகே கடமானை வேட்டையாடிய 3 பேர் கைது - 5 ஏர் கன், ஆயுதங்கள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே பெரும்பாறையில் கடமானை வேட்டையாடியதாக 3 பேரை வனத்துறையினர் கைது செய்து, 5 ஏர் கன், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியை அடுத்துள்ள பெரும்பாறை பகுதியில் கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனவர் அறிவழகன், வனக் காப்பாளர்கள் பீட்டர் ராஜா, திலக ராஜா, ராமசாமி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

நேர்மலை பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் விளக்கு வெளிச்சம் தெரிந்ததால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர்.அப்போது சிலர் நெற்றியில் விளக்கை கட்டி கொண்டு சுற்றித் திரிந்தனர். அவர்களை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், வெள்ளரிக்கரையை சேர்ந்த ஜோதிலிங்கம் (31), மஞ்சள் பரப்பை சேர்ந்த ரஞ்சித் (33), மதன்குமார் (19) என்பதும், கடமானை வேட்டையாடியதும் தெரிய வந்தது.

இதையடுத்து, மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கடமான் இறைச்சி, 5 ஏர்கன்கள், தோட்டாக்கள் மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

கைதான 3 பேரையும் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பழநி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய சிலரை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

சுற்றுச்சூழல்

18 days ago

சுற்றுச்சூழல்

21 days ago

சுற்றுச்சூழல்

22 days ago

சுற்றுச்சூழல்

25 days ago

சுற்றுச்சூழல்

25 days ago

சுற்றுச்சூழல்

27 days ago

சுற்றுச்சூழல்

29 days ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

மேலும்