வறண்டு வரும் காஞ்சிபுரம் அல்லப்புத்தூர் ஏரி: குடிநீருக்கு தவிக்கும் மான், மயில் கூட்டங்கள்!

By கோ.கார்த்திக்

காஞ்சிபுரம்: திருக்​காலிமேடு அருகே அல்​லப்​புத்​தூர் ஏரி​யில் மான்​கள் இனப்​பெருக்​கம் செய்து கூட்​டம், கூட்​ட​மாக சுற்​றித் திரியும் நிலை​யில், கோடை காலம் தொடங்​கிய​தால் ஏரி வறண்​டுள்​ளது. இதனால் குடிநீரை தேடி ஊருக்​குள் புகும் மான்​களுக்​கு, தெரு​நாய்​களால் ஆபத்து ஏற்​படும். எனவே, ஏரி​யில் செயற்கை குடிநீர் தொட்டி அமைக்க வேண்​டும் என வன விலங்கு ஆர்​வலர்கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

காஞ்​சிபுரம் மாநக​ராட்​சி​யின் 22-வது வார்டு திருக்​காலிமேடு அருகே அமைந்​துள்ள அல்​லப்​புத்​தூர் ஏரி பொதுப்​பணித் துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்​ளது. நத்​தப்​பேட்டை ஏரி மற்​றும் மஞ்​சள் நீர் கால்​வா​யின் உபரிநீர், அல்​லப்​புத்​தூர் ஏரி​யில் செல்​லும் நிலை இருந்​தது. ஏரி​யின் நீர்​வரத்து கால்​வாய்​கள் ஆக்​கிரமிப்பு, கழி​வுநீர் கால்​வா​யாக மாறிய​தால் ஏரிக்கு நீர்​வரத்து இல்​லை. ஆனால், மழைக் காலங்​களில் மட்​டும் ஏரி​யில் ஆங்​காங்கே சிறிதளவு தண்​ணீர் மட்​டுமே தேங்கி நிற்​கும் நிலை உள்​ளது. மேலும், ஏரி​யில் கரு​வேல மரங்​கள் உட்பட ஏராள​மான மரங்​கள் வளர்ந்து காடு​போல் அடர்ந்து காணப்​படு​கின்​றன.

இந்​நிலை​யில், அல்​லப்​புத்​தூர் ஏரி​யில் கடந்த 2016-ம் ஆண்டு இரண்டு புள்ளி மான்​கள் திரிவதை அறிந்த வனத்​துறை​யினர், ஏரி​யில் தங்​கி​யுள்ள மான்​கள் மற்​றும் பறவை​களுக்கு ஆபத்து ஏற்​படு​வதை தடுக்​கும் வகை​யில், ஏரிக்​கரைகளில் கண்​காணிப்பு பணி​களை மேற்​கொண்​டனர். தற்​போது, ஏரி​யில் மான்​கள் இனப்​பெருக்​கம் செய்து குட்​டிகளு​டன் கூட்​டம், கூட்​ட​மாக சுற்​றித் திரி​கின்​றன.

அதனால், மான்​களுக்கு ஆபத்து ஏற்​ப​டா​மல் இருக்​க​வும், மயில் மற்​றும் மான்​கள் நல்ல சூழலில் வசிக்​கும் வகை​யில் இயற்கை சூழலை பாது​காக்க எச்​சரிக்கை பலகைகள் வைக்க வேண்​டும். மேலும் மரக்​கன்​றுகளை நடு​வதற்​கும் பொதுப் பணித்​துறை மற்றும் வனத்​துறை நடவடிக்கை எடுக்க வேண்​டும் என அப்​பகுதி மக்​கள் மற்​றும் சுற்​றுச்​சூழல் ஆர்​வலர்​கள் வலி​யுறுத்தி வருகின்றனர்.

இந்​நிலை​யில், கோடைகாலம் தொடங்​கி​யுள்​ள​தால் கடும் வெப்​பம் காரண​மாக ஏரி​யில் குட்​டை​யாக தேங்கி நின்று தண்​ணீரும் வறண்டு காணப்​படு​கிறது. இதனால், குடிநீருக்​காக நீர்​நிலைகளை தேடி மான்​கள் கூட்​டம் ஊருக்​குள் வரும் நிலை ஏற்​பட்​டுள்​ள​தாக தெரி​கிறது.

இதுகுறித்​து, சுற்​றுச்​சூழல் மற்​றும் சமூக ஆர்​வலர்​கள் கூறிய​தாவது: அல்​லப்​புத்​தூர் ஏரி​யில் மான்​கள் இனப்​பெருக்​கம் செய்து கூட்​டம், கூட்​ட​மாக சுற்​றித்​திரிவது மிகுந்த மகிழ்ச்​சியை தந்​தா​லும், பிளாஸ்​டிக் கழி​வு​கள் அதி​கம் கொட்​டப்​பட்டு வரு​கின்​றன. மேலும், கரைப்​பகு​தி​களில் வன விலங்​கு​களுக்கு இடையூறு ஏற்​படும் வகையி​லான செயல்​கள் அதி​கம் நடை​பெறுகிறது.

அதனால், சுற்​றுப்​புற பொது​மக்​களிடம் வனவிலங்​கு​களின் வாழ்​விடம் தொடர்​பாக விழிப்​புணர்வு ஏற்​படுத்​தி, மான்​களின் ஓவி​யம் அடங்​கிய அறி​விப்​பு பலகைகள் அமைக்க வேண்​டும். இதுத​விர, ஏரி​யில் மயில்​களை​யும் பாது​காக்க வேண்​டும். மான்​களை பாது​காக்​கும் வகை​யில் ஏரி​யில் செயற்கை தொட்டி மூலம் குடிநீர் வழங்க வனத்​துறை மற்​றும் மாவட்ட நிர்​வாகம் நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு தெரி​வித்​தனர்.

இதுகுறித்​து, காஞ்​சிபுரம் மாவட்ட வனத்​துறை அலு​வலர் ரவிமீனா கூறிய​தாவது: அல்​லப்​புத்​தூர் ஏரி​யில் மான்​களுக்கு இடையூறு மற்​றும் பாதிப்பு ஏற்​ப​டாத வகை​யில், ஏரிக்​கரைகளில் கண்​காணிப்பு பணி​கள் மேற்​கொள்​ளப்​படும். கரை பகு​தி​களில் விழிப்​புணர்வு மற்​றும் மான்​கள் வசிக்​கும் பகுதி என பலகை அமைக்​க​வும், குடிநீர் தொட்டி அமைப்​பது தொடர்​பாகவும் ஆலோ​சித்​து உரிய நடவடிக்​கை எடுக்​கப்​படும்​ என்​றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

13 hours ago

சுற்றுச்சூழல்

18 hours ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

மேலும்