பந்தலூரில் காட்டு யானைகளை விரட்ட கும்கிகள் வரவழைப்பு

By செய்திப்பிரிவு

பந்தலூர்: கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பந்தலூர் இன்கோ நகர், இரும்பு பாலம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் 2 காட்டு யானைகள் நுழைந்து, அங்குள்ள வாழை, பாக்கு, தென்னை மரங்களை சேதப்படுத்தின.

இதையடுத்து யானைகளை விரட்ட தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. மேலும், வசீம், விஜய், பொம்மன், சீனிவாசன் என நான்கு கும்கி யானைகள் முதுமலை யானைகள் முகாமில் இருந்து பந்தலூர் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

இரண்டு காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் டிரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE