புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை

1. புதுக்கோட்டை தொகுதியில் குண்டாறு, வெள்ளாறு இரண்டையும் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

2. காவிரி உபரி நீரைப் புதுக்கோட்டையில் ஓடும் அக்கினி ஆற்றில் விடுவதன் மூலம் பாசன வசதி அதிகரிக்கப்படும்.

3. புதுக்கோட்டையில் காய்கறிகள், பழங்கள் சேமித்து வைக்க குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படும்.

4. அறந்தாங்கியில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.

5. புதுக்கோட்டை நகரின் புறவழிச்சாலை அருகே புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

6. அறந்தாங்கி நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

7. திருமயம் தொகுதி விவசாயிகள் பயன்பெறத் தக்க வகையில் காவிரி, கொள்ளிடம் உபரி நீர் மாயனூர் – மருங்காபுரி – மறவமதுரை – கவிநாடு கண்மாய்க்குக் கொண்டுவரும் திட்டம் செயல்படுத்தப்படும்.

8. பொன்னமராவதி மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.

9. விராலிமலை ஆரம்ப சுகாதார நிலையம் பொது மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும்.

10. ஆலங்குடியில் உரிமையியல் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

11. கோட்டைப்பட்டினத்தில் கடல் உணவு பதப்படுத்தும் கிடங்கு அமைக்கப்படும்.

12. திருவரங்குளம் ஒன்றியம் வல்லத்திராக்கோட்டை பழப் பண்ணை மீண்டும் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE