2011 சட்டமன்றத் தேர்தலில் மாதவரம்
வென்றவர்: வி. மூர்த்தி (அதிமுக)
பெற்ற வாக்குகள்: 115468
வெற்றி வாய்ப்பை இழந்தவர்: என். எஸ். கனிமொழி (திமுக)
பெற்ற வாக்குகள்: 80703
அமைச்சர் வி .மூர்த்தி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் புதிதாக உருவான தொகுதி இது. தொகுதியின் பெரும்பகுதி தற்போது சென்னை மாநகராட்சியின் எல்லைக்குள் அமைந்துள்ளது. ஊராட்சியாக இருந்த போது நடந்த வளர்ச்சிப் பணிகள் கூட தற்போது நடக்க வில்லை என்ற வருத்தம் தொகுதி மக்களிடம் உள்ளது.
புதிய சாலைகள், தெரு விளக்குகள் அமைத்தல் ஆகியவை முழுமையாடாமல் இருப்பதும் மக்களிடையே அதிருப்தையை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை ஏரிப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் மக்களிடையே அதிருப்தியே.
மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை
• குடிநீர் வசதி
• அருகாமையில் பள்ளி , கல்லூரிகள்.
• மின் விநியோகம்
• ரேசன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப் படுதல்
• விளையாட்டு திடல்கள்.
கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி
• வேலைவாய்ப்பு போதுமானதாக இல்லை.
• அரசு மருத்துவமனைகளில் போதுமான சேவை இல்லை.
• சாலைகள் தரமானதாக இல்லை
• போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லை
• சட்டம் ஒழுங்கு சுமார் தான்
திருப்தி இல்லை
• கழிவு நீர் அகற்ற உரிய வசதிகள் இல்லை.
• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள் போதுமானதாக இல்லை.
அரசு ஊழியர்களின் சேவை – திருப்தியாக இல்லை