புதுச்சேரி வளர்ச்சிக்காக பாடுபட்டவர் நாராயணசாமி: ஜி.கே.வாசன் பிரச்சாரம்

புதுச்சேரி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து பாடுபட்டவர் மத்திய அமைச்சர் நாராயணசாமி என அவரை ஆதரித்து புதுவையில் பிரச்சாரம் மேற்கொண்ட ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

மேலும், மாநில அரசு பல்வேறு தடங்கல்களை ஏற்படுத்தியபோதும் மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று மாநிலத்தின் வளர்ச்சிக்கு நாராயணசாமி உறுதுணையாக இருந்ததாக வாசன் கூறினார்.

ஆனால், பதவி ஆசையில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமியோ பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார் என்று அவர் விமர்சித்தார்.

மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் புதுச்சேரி முதல்வர் ஒருபோதும் எவ்வித நிதியும் கேட்கவில்லை. இதனால் மாநிலத்தின் வளர்ச்சியே பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது என வாசன் குற்றம் சாட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE