சோனியாவை எதிர்த்த ஆம் ஆத்மி வேட்பாளர் விலகல்

By செய்திப்பிரிவு

ரேபரேலி தொகுதியில் சோனியாவை எதிர்த்துப் போட்டியிடவிருந்த ஆம் ஆத்மி வேட்பாளரான உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பக்ருதீன் தனது வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றார்.

மனுவைத் திரும்பப் பெற்றதற்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும் இது கட்சியின் முடிவல்ல எனத் தெரிகிறது. இதையடுத்து சமூக ஆர்வலர் அர்ச்சனா ஸ்ரீவஸ்தவா, ரேபரேலி தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளராகக் களமிறக்கப் படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE