திரிணமூல் கட்சி நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும்: மம்தா பானர்ஜி

நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெரும் பங்கு வகிக்கும் என அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 34 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 4 இடங்களிலும், இடது சாரிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் அமோக வெற்றி பெற்றுள்ள மம்தா பானர்ஜி: "சில ஊடகங்கள் எனக்கு எதிராக விஷம செய்திகளை வெளியிட்டு வந்தாலும் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளோம். இந்த வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆட்டத்தில் மக்கள் தான் ஆட்ட நாயகர் என்றார்.

மாநிலக் கட்சிகளில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று வலுவான நிலையில் இருப்பதாகவும் மம்தா பாராட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE