மாற்றத்திற்கு வாக்களித்துள்ளார்கள் மக்கள்: ஆர்.எஸ்.எஸ் கருத்து

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பெற்றுள்ள நிலையில்; மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளார்கள் என ஆர்.எஸ்.எஸ். கருத்து தெரிவித்துள்ளது.

பாஜக வெற்றி குறித்து ஆர்.எஸ்.எஸ். முக்கிய பிரமுகர் ராம் மாதவ் கூறுகையில்: "மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். மோடி தலைமையிலான அரசு நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும் என எதிர்பார்க்கிறோம். பாஜக தனிப்பெரும்பான்மை பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பாஜகவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தியில் மிகவும் நேர்த்தியாக செயல்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE