பிளஸ் 1 முடிவுகள் | சிறைவாசிகள் 86.40%, மாற்றுத் திறனாளிகள் 88.98% தேர்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 1 பொதுத் தேர்வில் சிறைவாசிகள் 86.40 சதவீதமும், மாற்றுத் திறனாளிகள் 88.98 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியிடப்பட்டன. மொத்தம் தேர்வு எழுதிய 7,76,844 மாணவ, மாணவியர்களில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.93. இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 3,91,968. மாணவர்களின் எண்ணிக்கை 3,14,444. மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 94.36. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.99. மாணவர்களை விட மாணவியர்கள் 7.37 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குறிப்பாக சிறைவாசிகள் 125 பேர் தேர்வு எழுதினர். இதில், 108 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி பார்த்தால், 86.40 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகள் 5,709 பேர் தேர்வு எழுதினர். இதில் 5,080 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 88.98 சதவீதம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE