விநாயகா மிஷன் குழுமத்தில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘பேசுவோம் வெல்வோம்’ பேச்சுப் போட்டி

By செய்திப்பிரிவு

சென்னை: விநாயகா மிஷன் குழுமத்தில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘பேசுவோம் வெல்வோம்’ என்ற பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சிறப்பு அழைப்பாளராகவும், நிகழ்ச்சியின் நடுவராகவும் பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம் பங்கேற்றார்.

சிறுவர், இளையவர், பிரியமானவர்கள் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 3 பரிசுகள் வழங்கப்பட்டன முதல் பரிசாக சைக்கிள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நடுவராக ஆண்டாள் பிரியதர்ஷினி, பேராசிரியர் சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு, சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். விநாயகா மிஷன் கல்லூரியை சேர்ந்த அனைத்து துறை மாணவர்கள், சட்டக் கல்லூரி மாணவர்களும் இதில் கலந்துகொண்டனர். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், இந்த நிகழ்ச்சியின் பிரின்ட் பார்ட்னராக இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE