சென்னை: பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய கல்விக் கொள்கையின்படி, இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிப்பு திட்டம் (யுவா), கடந்த ஆண்டு மத்திய கல்வி அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. நடப்பு கல்வியாண்டுக்கான (2022-23) யுவா-2.0 திட்டம் ‘ஜனநாயகம்’ என்ற கருப்பொருளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் 30 வயதுக்கு கீழான இளம் எழுத்தாளர்கள் கட்டுரை, கவிதை, கதை, நாடகம், பயணக் குறிப்புகள் உட்பட பல்வேறு வடிவங்களில் எழுதுவதற்கு ஊக்குவிக்கப்படுவர். இதற்கான விண்ணப்பப்பதிவு நவ.30 வரை நடைபெறவுள்ளது. தேர்வாகும் 75 பேருக்கு தேசிய புத்தக அறக்கட்டளை மூலம் 6 மாதம் சிறப்புப் பயிற்சி தரப்படும். மேலும், மாதம் ரூ.50,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் mygov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இளம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த ‘யுவா’ திட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்த வேண்டும். கூடுதல் விவரங்களை /www.nbtindia.gov.in/ என்ற வலைதளத்தில் அறியலாம்.
» ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் விருதுகள் | நாடு முழுவதும் 39 பள்ளிகள் தேர்வு - 2ம் இடத்தில் புதுச்சேரி