போட்டித் தேர்வுகளில் வெற்றியே தேடி தருவது எவை? - பல்துறை ஆளுமைகள் விவரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: போட்​டித் தேர்​வு​களில் இலக்கை நோக்​கிய பயண​மும் ஆளு​மைத் திறனும் வெற்​றியை தேடித்​தரும் என்று ‘உனக்​குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்​வில் பங்​கேற்ற சிறப்பு விருந்​தினர்​கள் நம்​பிக்கை தெரி​வித்​தனர்.

ஐஏஎஸ் படிக்க வேண்​டும் என்ற ஆசை பலருக்​கும் உண்​டு. ஆனால், அதற்​கான அடிப்​படைத் தேவை​யான கல்​வித் தகுதி என்ன, எத்​தனை ஆண்​டு​கள் படிக்க வேண்​டும், அதிக செல​வாகுமா என்ற ஏராள​மான கேள்வி​களு​டன் தயங்கி நிற்​பவர்​களே அதி​கம். இவ்​வாறான தயக்​கத்​தைப் போக்​கி, யுபிஎஸ்சி தேர்​வுக்​குப் படிப்​ப​தற்​கான தெளி​வைத் தரும் நோக்​கத்​தில் கிங் மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்​கும் ‘இந்து தமிழ் திசை - உனக்​குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழி​காட்டி நிகழ்ச்சி மாணவர்​களுக்​காக நடத்​தப்​பட்டு வரு​கிறது.

அதன்​படி நடப்​பாண்​டுக்​கான ‘உனக்​குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சி சென்னை எழும்​பூரில் உள்ள எத்​தி​ராஜ் மகளிர் கல்​லூரி அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. சிறப்பு விருந்​தின​ரான காவல்​துறை கண்​காணிப்​பாளர் (போதைப்​பொருள் தடுப்​புப் பிரிவு) ஏ.ம​யில்​வாக​னன் பேசி​ய​தாவது: சிவில் சர்​வீஸ் பணியை பொறுத்​தவரை முன்​த​யாரிப்​பு, தேர்வு நடை​முறை, பணி​யில் சேருதல் மற்​றும் சேவை​யாற்​று​தல் ஆகிய 4 படிகள் உள்​ளன.

தற்​போது நீங்​கள் முதல்​நிலை​யில் இருக்​கிறீர்​கள். போட்​டித் தேர்​வில் வெற்​றி​பெற எந்த தகு​தி​யும், பின்​னணி​யும் முக்​கியமில்​லை. விடா​முயற்​சி​யுடன் போராடி​னால் நீங்​கள் அனை​வரும் வெற்றி பெறலாம். தேர்​வுக்கு தயராகும்​போது பாடங்​களை முழு​மை​யாக உணர்ந்து படித்​தால் எளி​தில் மறக்​காது. உங்​களுக்​குள் இருக்​கும் சிறந்த திறன்​களைக் கண்​டறிந்து வெளிக்​கொணர வேண்​டும்.

நீங்​கள் விரும்​பும் இடத்தை அடைய அதற்​கான உழைப்பை கொடுத்​தால் அவை கை​கூடும். சில சமயங்​களில் நீங்​கள் விருப்​பத்​துக்கு மாறாக வேறு பதவி கிடைத்​தால் முழு மனதுடன் அதை ஏற்க வேண்​டும். வாழ்​வில் இயற்கை நமக்கு வழங்​கு​வதை ஒதுக்​காமல் அதில் திறம்பட செயல்பட வேண்​டும். கிடைத்த வாய்ப்​பு​களைச் சரி​யாக பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும். மனதில் இருக்​கும் தயக்​கம், அச்ச உணர்​வு​களை உடைத்து சவால்​களைப் போர்க்​குணத்​துடன் எதிர்​கொள்ள வேண்​டும். அப்​போது​தான் நீங்​கள் அடுத்​தகட்​டத்​துக்கு முன்​னேற முடி​யும். உங்​களிடம் உள்ள தனிப்பட்ட திறன்​களை வளர்த்​துக் கொள்​ளுங்​கள். எந்த துறை​யில் பணி​யாற்​றி​னாலும் உடல் நலத்​தி​லும், ஆரோக்​கி​யத்​தி​லும் முறை​யாக கவனம் செலுத்​து​வது மிக​வும் அவசி​ய​மாகும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

வரு​மானவரித் துறை ஆணை​யர் வி.நந்​தகு​மார் பேசி​ய​தாவது: சிறு​வய​தில் நான் கற்​றல் குறை​பாடு கொண்​ட​வ​னாக இருந்​தேன். படிப்பை பாதி​யில் விட்​டுப் பணிக்குச் சென்​றேன். ஆனால், ஆளு​மைத் திறன் உதவி​யுடன் சாதிக்க வேண்​டுமென்ற எண்​ணம் இருந்​து​கொண்டே இருந்​தது. இலக்கை நோக்​கிய பயண​மும், ஆளு​மைத் திறனும் வெற்​றியைத் தேடித் தரும். யுபிஎஸ்சி தேர்​வெழுத முதலில் ஆர்​வம் இருக்க வேண்​டும். ஒவ்​வொரு கால​கட்​டத்​தி​லும் நாம் சரி​யான வழி​யில் செல்​வதற்​கான சூழல்​களை இயற்கை நமக்கு எடுத்​துரைக்​கும். மற்​றவர்​களை ஒப்​பி​டா​மல் உங்​களு​டன்​தான் நீங்​கள் போட்​டி​யிட வேண்​டும்.

உங்​களின் கனவை நோக்கி பயணிக்க வேண்​டும். தொடர் முயற்​சிகள்​தான் வெற்​றிக்கு வித்​திடும். சிவில் சர்​வீஸ் தேர்​வில் வெற்றி பெறு​வதற்கு முதலில் சமு​தாய நலனுக்​கானதை செய்ய வேண்​டும் என்ற உந்​துதல் இருக்க வேண்​டும். நேர்​காணலின்​போது உங்​களின் ஆளு​மைத் திறனே மதிப்​பிடப்​படும். அதனால் வாழ்​வில் தேடல் முக்​கிய​மானது. கிடைக்​கும் எந்த வாய்ப்​பை​யும் தவற​வி​டா​மல், அதில் நமது தனித்​து​வ​திறமை​யை நிரூபிக்க வேண்​டும்.

வாய்ப்​பென்​பது அடிக்​கடி நமக்கு கிட்​டுவ​தில்​லை. ஒரே ஒரு​முறை கிடைக்​கும் வாய்ப்​பிலும் நாம் சாதிப்​ப​தற்​கான சாத்​தி​யங்​கள் நிறையவே உள்​ளன. யாரோடும் உங்​களை ஒப்​பி​டா​மல், உங்​களால் நிச்​ச​யம் முடி​யும் என்​கிற நம்​பிக்​கையோடு தேர்​வு​களை எதிர்​கொண்​டால் நாளைய வெற்​றி​யாளர் நீங்​கள் தான். இவ்​வாறு அறி​வுறுத்​தி​னார்.

இதே​போல் கிங் மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலை​வர் மற்​றும் நிர்​வாக இயக்​குநர் சத்ய பூமி​நாதன் பேசி​ய​தாவது: யுபிஎஸ்சி தேர்​வுக்கு 10 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​தா​லும் 5 லட்​சம் பேர் தேர்​வுக்கு வரமாட்​டார்​கள். அதி​லும் 2 முதல் 3 லட்​சம் பேர் தேர்வு அனுபவத்​துக்​காக மட்​டுமே வந்து செல்​வர். சுமார் 30 ஆயிரம் பேர்​தான் தீவிர​மான ஆர்​வத்​துடன் தேர்வு எழுது​வர். அதில் ஒரு​வ​ராக நீங்​கள் இருந்​தாலே யுபிஎஸ்சி தேர்​வில் வெற்றி பெற்​று​விடலாம். எனவே இதில் கடும் போட்டி நில​வும் என மாணவர்​கள் நினைக்க வேண்​டாம்.

தமிழகத்​தில் குரூப் 4 தேர்​வுக்கு 20 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​தால் அதில் 17 லட்​சம் பேர் பட்​டப்​படிப்பு முடித்​தவர்​களாக இருப்​பர். ஆனால், யுபிஎஸ்சி தேர்​வுக்கு 20,000 பேர்​தான் விண்​ணப்​பிக்​கின்​றனர். இந்த எண்​ணிக்​கையை அதி​கரிக்​கவே இத்​தகைய விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகளை நடத்​துகிறோம். இவ்​வாறு தெரி​வித்​தார்.

`இந்து தமிழ் திசை' முது​நிலை உதவி ஆசிரியர் மு.​முரு​கேசன் பேசும்​போது, ‘யுபிஎஸ்சி போட்​டித் தேர்​வு​களில் வெற்றி பெறவேண்​டும் என்ற ஆசை எல்​லோருக்​கும் உள்​ளது. ஆனால், அதற்​கான முயற்​சி​யும் பயிற்​சி​யும் இருக்​கிறதா என்​பதே கேள்விக்​குறி. அப்​படி​யான மாணவர்​களுக்கு வழி​காட்​டவே இந்த நிகழ்ச்சி நடத்​தப்​படு​கிறது.

யுபிஎஸ்சி போட்​டித் தேர்​வில் தமிழக மாணவர்​களின் தேர்ச்சி விகிதம் பத்​தாண்​டு​களுக்கு முன்பு இருந்​ததை​விட தற்​போது குறைந்து கொண்டே வரு​கிறது. முன்​னிலும் அதி​க​மாக தமிழக மாணவர்​கள் இந்​தத் தேர்​வில் வெற்​றி​பெற்​று, அரசு உயர் பதவி​களுக்​குச் செல்ல வேண்​டுமென்​பதை இலக்​காகக் கொண்டே ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், இத்​தகைய முயற்​சியை முனைப்​போடு முன்​னெடுத்து வரு​கிறது” என்​றார்.

இந்​நிகழ்​வில் எத்​தி​ராஜ் மகளிர் கல்​லூரி முதல்​வரும் செய​லா​ள​ரு​மான எஸ்​.உ​மாக​வுரி, மூத்த ஐஏஎஸ் அதி​காரி விவேக் ஹரி​நா​ராயண் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். நிறை​வாக, மாணவர்​களின் கேள்வி​களுக்கு சிறப்பு விருந்​தினர்​கள் பதிலளித்​தனர். மேலும், நிகழ்ச்​சிக்கு முன்​ன​தாக நடத்​தப்​பட்ட தகு​தித் தேர்​வில் முதல்​ 3 இடங்​களை பிடித்​த மாணவர்​களுக்​கு கிங்​ மேக்​கர்​ஸ்​ ஐஏஎஸ்​ அகாட​மி சார்​பில்​ இலவச​ பயிற்​சி​யும்​ வழங்​கப்​பட உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

19 hours ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

மேலும்