தனியார் சட்டக் கல்லூரிகளில் எல்எல்பி படிப்பில் சேர அக்.23 வரை சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: தனியார் சட்டக் கல்லூரிகளில் எல்எல்பி படிப்பில் சேர அக்.23 வரை மின்னஞ்சல் வாயிலாக சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம்.

இது தொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் 3 ஆண்டு எல்எல்பி படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் வாயிலாக அக்.23-ம் தேதி மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் சரிபார்ப்பு அக்.23 வரை நடைபெறும்.

கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை 26-ம் தேதி இணையவழியில் வழங்கப்படும். சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் அக்.28 முதல் 30-ம் தேதிக்குள் சேர்ந்துவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

10 hours ago

கல்வி

21 hours ago

கல்வி

22 hours ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

மேலும்