ஆக.4-ல் நடக்க இருந்த உதவி பேராசிரியர் தேர்வு தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆகஸ்ட் 4-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடங்களை போட்டி தேர்வு மூலம் நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 14-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 4-ம் தேதி நடக்க இருந்த போட்டி தேர்வு, நிர்வாக காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE