அரசு கலைக் கல்லூரிகளில் சேர்க்கை: 2 லட்சத்தை தாண்டியது ஆன்லைன் விண்ணப்பம்

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. அதேபோல், பொறியியல் படிப்பில் சேர இதுவரை 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி நிலவரப்படி, இதுவரை 2 லட்சத்து 5 ஆயிரத்து 448 மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாககவும், அவர்களில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 815 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளதாக கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், பொறியியல் படிப்புகளில் சேரவும் மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். மாலை 6 மணி நிலவரப்படி, 1 லட்சத்தை 62 ஆயிரத்து 486 பேர் விண்ணப்பித்திருப்பதாகவும், அவர்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 314 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும், 71 ஆயிரத்து 516 பேர் தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்திருப்பதாகவும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE