சங்கர் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி: பிப்.4-ல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கிறது

By செய்திப்பிரிவு

சென்னை: சங்கர் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில் நடைபெற உள்ளது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படை தேவையான கல்வித் தகுதி என்ன? எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும்? அதிக செலவு ஆகுமா? என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களின் எண்ணிக்கையே அதிகம்.

அவ்வாறான தயக்கத்தைப் போக்கி, இத்தேர்வுகளுக்கு படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

ஜெ. ராதாகிருஷ்ணன், பூ.கொ .சரவணன், டாக்ட ர் எஸ்.டி.வைஷ்ணவி

இதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில் ‘ஆளப் பிறந்தோம்’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையருமான டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ஐஏஎஸ், இந்திய விமான நிலைய ஆணையரகத்தின் சுங்கத்துறை துணை ஆணையர் பூ.கொ.சரவணன், ஐஆர்எஸ், சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்ற உள்ளனர்.

‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/ALP2024CHE என்ற லிங்கில் அல்லது இத்துடன் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, பதிவுசெய்து கொள்ளவும். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் ‘தேர்வுக்கு வழிகாட்டி’ நூலும், பாடத்திட்டக் குறிப்புகளும் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

16 hours ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

7 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

12 days ago

மேலும்