சென்னை: அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘கனமழை எச்சரிக்கை காரணமாக இன்றும் (ஞாயிறு), நாளையும் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தொலை தூர கல்வி நிறுவனத்தின் பருவத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகிறது.
நாளை (திங்கள்) நடைபெறவிருந்த அண்ணா பல்கலை. நேரடி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகிறது. இதேபோல், சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து விதமான கலை,அறிவியல் கல்லூரிகளிலும் நாளை நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.