ஆஹா..! - மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் ஆலங்குடி அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2 பேர், மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் 33 வகையான போட்டிகளை உள்ளடக்கிய கலைத் திருவிழா நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு வேலூரில் அண்மையில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றன.

6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பிரிவில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவிகள் ஆர்.தர்ஷனா- செவ்வியல் நடனத்திலும், என்.தனவர்த்தனா- தோல் இசைக் கருவி இசைக்கும் போட்டியிலும் பங்கேற்று முதலிடம் பிடித்தனர். மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவிகளை, ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

14 hours ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

7 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

12 days ago

மேலும்