ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

By செய்திப்பிரிவு

சென்னை: ஜேஇஇ முதன்மைத் தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் நாளைக்குள் (நவம்பர் 30) விண்ணப்பிக்க வேண்டும் என்று என்டிஏ அறிவுறுத்தியுள்ளது.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதற்கட்ட தேர்வு, பிரதான தேர்வு என இரு பிரிவுகளாக நடைபெறும். இதில் முதற்கட்ட தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதற்கட்ட தேர்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் பலர் ஆர்வமுடன் விண்ணப்பிக்கின்றனர். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (நவம்பர் 30) முடிவடைகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறும். இதன் முடிவுகள் பிப்ரவரி 12-ம் தேதி வெளியிடப்படும்.

இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட இதர தகவல்கள் பின்னர் வெளியிடப்படும். இதுகுறித்தகூடுதல் விவரங்களை /nta.ac.in/என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமங்கள் இருந்தால், மாணவர்கள் 011-40759000/69227700 என்ற எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

14 hours ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

7 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

12 days ago

மேலும்