சென்னையில் நாளை கல்விக்கடன் சிறப்பு முகாம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை லயோலா கல்லூரியில் நாளை (நவ.18) தமிழக அரசின் சார்பில் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசும், வங்கிகளும் இணைந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கல்விக்கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்ட மாணவர்களுக்காக லயோலா கல்லூரியில் நவ.18-ம் தேதி (நாளை) மாபெரும் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

கல்விக்கடன் விண்ணப்பம், தேவையான வருமானச் சான்றிதழ், விண்ணப்பம் மற்றும் பான்கார்டு ஆகியவை இ-சேவை மையம் மூலம் முகாமிலேயே விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் அனைத்து மாணவ, மாணவியரும், பெற்றோரும் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE