அரசு ஐடிஐ-ல் மாணவர் சேர்க்கை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் எம்.அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) டெஸ்க்டாப் பப்ளிஷிங் ஆபரேட்டர், டிஜிட்டல் போட்டோகிராபர், உணவு உற்பத்தி, உணவு மற்றும் பான சேவை உதவியாளர், ஸ்மார்ட்போன் டெக்னீஷியன் மற்றும் ஆப் டெஸ்டர், இண்டஸ்டிரி 4.0-ன் கீழ் சிஎன்சி டெக்னீசியன், அடிப்படை வடிவமைப்பு மற்றும் மெய்நிகர் சரிபார்ப்பு, உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் ஆட்டோமேஷன், தொழில் துறை ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி ஆகிய தொழிற் பிரிவுகளில் 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 2023-ம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் நேரடியாக பயிற்சியில் சேரலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE