மேத்தா ஐஏஎஸ் அகாடமியில் நாளை பயிற்சி: முன்பதிவு செய்ய அழைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: அண்ணாநகர், திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் மேத்தா ஐஏஎஸ் அகாடமி, மத்திய அரசு தேர்வுகளான யூபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ, 4, விஏஓ, டிஆர்பி, டெட், பிஇஓ உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் 20 சதவீத கட்டணச் சலுகையுடன் நேரடி மற்றும் ஆன்லைன் முறைகளில் பயிற்சி அளித்து வருகிறது. தேர்வில் வெற்றி பெறும்வரை இங்கு பயிற்சியைத் தொடரலாம்.

குளிர்சாதன வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போர்டு கிளாஸ், இலவச படிக்கும் இடம் உண்டு. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் பாடம் கற்பிக்கப்படுகிறது. பாடவாரியாக 15-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. வாரந்தோறும் 2 தேர்வுகள், தேர்வுக்கான விளக்கமும் அளிக்கப்படுகிறது.

ஐஏஎஸ் அதிகாரி எம்.கருணாகரன், திருமங்கலம் காவல் உதவி ஆணையர் வரதராஜன், வணிக வரித்துறை உதவி ஆணையர் பி.சத்யா, பால்வளத் துறை மூத்த ஆய்வாளர் செண்பகராஜா போன்ற அரசு பதவிகளில் உள்ள உயர் அதிகாரிகள் நாளை (ஆக.6) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் பயிற்சி வகுப்பில் பங்கேற்று போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல், முதல் முயற்சியிலேயே தேர்வில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். விருப்பமுள்ளவர்கள் 044-42805949, 7305337618, 7305339618, 9750649464 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE