பிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் படிப்பில் சேர சென்னை ஐஐடி அழைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

‘பிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்’ எனும் 4 ஆண்டு படிப்பைசென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. இந்த படிப்பில் சேருவதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வில்தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை. அதற்கு மாறாக பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், கணிதப் பாடங்களை படித்தவர்களாக இருக்க வேண்டும்.

இதுதவிர மாணவர்களுக்கு பாடங்கள் முழுவதும் இணையவழியிலேயே பயிற்றுவிக்கப்படும். இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://study.iitm.ac.in/es/ என்ற இணையதளம் வழியாக ஆக. 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் ஆட்டோமோட்டிவ், செமி கண்டக்டர் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகளை பெற முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE