அகில இந்திய உயர் கல்வி ஆய்வறிக்கை வெளியிடுவதில் தாமதம் ஏன்? - மத்திய அரசு விளக்கம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: கரோனாவால் அகில இந்திய உயர்கல்வி ஆய்வறிக்கை வெளியிடுவதில் தாமதமாகி வருகிறது. இந்தத் தகவல், விழுப்புரம் எம்.பி.யான டி.ரவிக்குமார் நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பிய வினாவுக்கானப் பதிலில் வெளியாகியுள்ளது. இது குறித்து இன்று மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதில்: அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு (ஏஐஎஸ்எச்இ) என்பது நாட்டில் உள்ள உயர்கல்வி புள்ளிவிவரங்களின் விரிவான தரவு ஆகும். மாணவர் சேர்க்கை , நிறுவனங்கள் குறித்த தகவல், ஆசிரியர்கள் பற்றிய தகவல் போன்ற பல்வேறு அளவுருக்கள் பற்றிய தரவுகள், ஏஐஎஸ்எச்இயின் கீழ் பதிவு செய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களால் அதற்கென உருவாக்கப்பட்டுள்ள தளத்தில் ஆண்டுதோறும் பதிவேற்றப்படுகின்றன.

ஏஐஎஸ்எச்இ கணக்கெடுப்பு மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவின் மூலம் நடத்தப்படுகிறது. 2019-20 கணக்கெடுப்பின் அறிக்கை வெளியிடுவதும், 2020-21 கணக்கெடுப்புக்கான ஆய்வு தொடங்குவதும் முன்னெப்போதும் இல்லாத உலகளாவிய கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டன. 2020-21 ஆம் கல்வி ஆண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை அதனால் கணிசமாகத் தாமதமானது. டிசம்பர், 2020 வரை கூட அது நீட்டிக்கப்பட்டது. சில இடங்களில் அதற்குப் பிறகும் கூட நடந்தது. மாணவர் சேர்க்கை செயல்முறை முழுமையாக முடிந்த பின்னரே பாடவாரியான மாணவர் சேர்க்கை பற்றிய விரிவான தரவு உயர்கல்வி நிறுவனங்களால் அளிக்கப்படும். மேலும், 2021 ஆம் ஆண்டில் 2 ஆவது கோவிட் அலை கடுமையாக வெடித்தது,

இதில் பல்வேறு துறைகள், மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர், மேலும் கணக்கெடுப்பைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஏஐஎஸ் எச்இ 2020-21 இல் பொறிமுறையானது தரவு சேகரிப்பாகும். இது, அடோப் அக்ரோபேட் வடிவமைப்பில் உள்ள தரவு நிரப்புதலின் பழைய அமைப்பிலிருந்து, பயனருக்கு எளிதான தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட வலை தரவுப் பிடிப்பு வடிவத்திற்கு(டிசிஎப்) தேசிய தகவல் மையத்தால்(என்ஐசி) மேம்படுத்தப்பட்டது. 2019-20 வரை, ஏஐஎஸ்எஸ்இயில் தரவு சேகரிப்புக்கு விண்டோஸ் 2008 அடோப் மென்பொருள் பயன்படுத்தப்பட்டது, இது கிளவுட் சர்வருக்குப் பதிலாக நேரடியான சர்வரில் சேமிக்கப்பட்டது. எனவே, என்ஐசி ஐடி இன்ஃப்ரா-கொள்கைக்கு இணங்க வேண்டும். இதனால், புதிய தகவல் தொழில்நுட்ப அம்சங்களுடன் ஏஐஎஸ்எச்இ போர்ட்டலை மேம்படுத்தவும், வெப்பானது ஏஐஎஸ்எச்இயில் 2021 ஆம் ஆண்டில் தகவல்களைச் சேகரிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏஐஎஸ்எச்ஐயில் 2020-21 கணக்கெடுப்புக்கு முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, செயல்பாட்டுச் சோதனையைத் தொடர்ந்து, அமைப்பின் விரிவான பாதுகாப்புத் தணிக்கை மற்றும் புதிய அமைப்பைச் செயல்படுத்துவதற்கு முன் மாநில உயர் கல்வி நிறுவனங்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. முதல் டிசிஎப் கணக்கெடுப்பு என்பதால், முந்தைய தரவு அமைப்பு மற்றும் அறிக்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இது ஆய்வின் யூனிட் அளவிலான தரவுகளுடன் சோதிக்கப்பட வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, கணக்கெடுப்பு முடிந்ததும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏஐஎஸ்எச்இ 2020-21 அறிக்கை, ஏற்கனவே ஜனவரி 2023 இல் வெளியிடப்பட்டது. 2019-20 இல் நாட்டின் மாணவர் சேர்க்கை 3.85 கோடியிலிருந்து 2020-21ல் 4.14 கோடியாக அதிகரித்துள்ளது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE