மன்னார்குடி பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

By செய்திப்பிரிவு

சென்னை: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, பாமணி வருவாய் கிராமம், வெள்ளங்குழி அருகே இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், "திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், பாமணி வருவாய் கிராமம், வெள்ளங்குழி (தேவேந்திரபுரம்) என்ற இடத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (ஜூன் 16) பிற்பகல் 1.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சதீஷ்குமார் (வயது 34) மனோகரன் என்பவர் பலத்த தீக்காயங்களுடன் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்." என்று தெரிவித்துள்ளார் .

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மாவட்டங்கள்

3 months ago

மாவட்டங்கள்

3 months ago

மாவட்டங்கள்

3 months ago

மாவட்டங்கள்

3 months ago

மாவட்டங்கள்

3 months ago

மாவட்டங்கள்

3 months ago

மாவட்டங்கள்

3 months ago

மாவட்டங்கள்

3 months ago

மாவட்டங்கள்

3 months ago

மாவட்டங்கள்

3 months ago

மாவட்டங்கள்

3 months ago

மாவட்டங்கள்

3 months ago

மாவட்டங்கள்

3 months ago

மாவட்டங்கள்

3 months ago

மாவட்டங்கள்

3 months ago

மேலும்