சென்னை | ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதால் சிறுமி தற்கொலை: இளைஞருக்கு இரட்டை ஆயுள்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் வீடுகளில் பேப்பர் போடும் வேலை செய்த குணசீலன் என்பவர், தான் குடியிருந்த வீட்டு உரிமையாளரின் 13 வயது மகளுடன் நட்பாக பழகி செல்போனில் ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்த சிறுமி, கடந்த 2020-ம் ஆண்டு வீட்டின் குளியல் அறையில் தற்கொலை செய்துகொண்டார். இந்தசம்பவம் குறித்து, போக்சோ சட்டத்தின்கீழ் தரமணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குணசீலனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, சென்னை போக்சோ தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில், தீர்ப்பளித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட குணசீலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், ரூ.3 லட்சம் அபராதம் விதித்து, அந்த தொகையை, சிறுமியின் பெற்றோருக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

34 mins ago

க்ரைம்

4 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

மேலும்