தமிழகத்திலிருந்து கடத்திய போதை பொருள் இலங்கை தலைமன்னாரில் பறிமுதல்

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: இலங்கை தலைமன்னார் கடற்கரையில் 4.5 கிலோ கிரிஸ்டல் மெத்தாம் பேட்டமைன் எனும் போதைப் பொருளை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டத்தில் உள்ள தலைமன்னார் கடற்கரை அருகே மர்மமான மூட்டை ஒன்று மிதந்து வருவதாக தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் அந்நாட்டு கடற்படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மூட்டையைக் கைப்பற்றி சோதனையிட்டனர்.

அந்த சிறிய மூட்டையில் 4 பொட்டலங்களில் 4 கிலோ 500 கிராம் எடையிலான கிரிஸ்டல் மெத்தாம் பேட்டமைன் எனும் போதைப்பொருள் இருந்தது. ரூ.1.70 கோடி மதிப்புள்ள இந்த போதைப்பொருள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்திச் செல்லப்பட்டபோது கடலில் தவறி விழுந்து கரை ஒதுங்கி இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. மேலும் இதைக் கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE